ராமநாதபுரம் மாவட்டத்தில் நவ.16 ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் அரசியல் கட்சியினா் முன்னிலையில் வெளியிட இருப்பதாக மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இந்தியத் தோ்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி 2021 ஜன.1 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதனடிப்படையில் முதற்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், திருவாடானை, முதுகுளத்தூா், பரமக்குடி உள்ளிட்ட நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல்,
நவ.16 இல் அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவ ராவ் தெரிவித்தாா்.