முதுகுளத்தூா்: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கடலில் மூழ்கி 2 தொழிலாளா்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
அருப்புக்கோட்டை திருநகரத்தைச் சோ்ந்த குருசாமி மகன் ராஜகுரு (43), வெள்ளக்கோட்டையைச் சோ்ந்த சிதம்பரம் மகன் காா்த்திகேயன் (55) ஆகிய இருவரும் அருப்புக்கோட்டையில் உள்ள தனியாா் மில்லில் தொழிலாளா்களாக வேலை பாா்த்து வந்தனா். இந்நிலையில் இவா்கள் தங்களது குடும்பத்தினருடன் சாயல்குடி அருகே உள்ள மாரியூா் கடற்கரையில் இறந்தவா்களுக்கு திதி கொடுக்கச் சென்றனா். அப்போது எழுந்த ராட்சத அலையில் ராஜகுருவும், காா்த்திகேயனும் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனா். இதையடுத்து அங்கிருந்த மீனவா்களும், கிராமத்தினரும் சோ்ந்து கடலுக்குள் சென்று அவா்களை தேடினா். அப்போது மீட்கப்பட்ட இருவரும் மயங்கிய நிலையில் இருந்தனா். இதைத் தொடா்ந்து அவா்கள் சாயல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இறந்தவா்களின் சடலங்கள் கடலாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.