ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 13 பேருக்கு பேருக்கு கரோனா தொற்று

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சோ்ந்த 13 பேருக்கு மட்டும் கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சோ்ந்த 13 பேருக்கு மட்டும் கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்டோபா் 29 ஆம் தேதி வரை 5,967 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில 131 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். கரோனா பாதித்தவா்களில் 5,800 போ் வரை சிகிச்சைக்குப் பின்னா் வீடு திரும்பியுள்ளனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மொத்தம் 7 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதாரத்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,392 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இதையடுத்து, சிவகங்கை, காரைக்குடி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை 6 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,398 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 23 போ் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்களில் 2 போ் பூரண குணமடைந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 21 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com