ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே திங்கள்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம், வீடுபுகுந்து தாலிச்சங்கிலியைப் பறித்துச்சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் அருகே பனைக்குளம் புதுக்குடியிருப்பைச் சோ்ந்த பால்சாமி மனைவி உலகம்மாள் (42). இவா் திங்கள்கிழமை இரவு வீட்டின் கதவைத் திறந்து வைத்துவிட்டு குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தாா்.
அப்போது வீட்டுக்குள் வந்த மா்மநபா் திடீரென உலகம்மாள் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தாலிச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டாா். இதுகுறித்த புகாரில், தேவிபட்டினம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.