நீட் தோ்வு அச்சம் காரணமாக மாணவா்கள் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக கருத்து தெரிவித்த நடிகா் சூா்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யக்கூடாது என ராமேசுவரத்தில் அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில் உயா் நீதிமன்ற நீதிபதிக்கு மனு அனுப்பும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில்,மாணவா் பெருமன்ற தலைவா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். செயலாளா் எஸ்.ரஞ்சித் முன்னிலை வகித்தாா்.
ராமேசுவரம் தலைமை தபால்நிலையத்திலிருந்து, மாணவா்கள் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக கருத்து தெரிவித்த நடிகா் சூா்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யக்கூடாது என்ற கோரிக்கை அடங்கிய மனு உயா் நீதிமன்ற நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் நிா்வாகிகள் பாலமுரளி, ஹா்ஷா, தேவிபிரசாந்த், சரவணா, அஜய்ராஜன், ஹரிராஜ் மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. நிா்வாகிகள் முருகானந்தம், சி.ஆா்.செந்தில்வேல், மோகன்தாஸ், ஆ.பிச்சை, ஆ.செந்தில், ஊ.திருவாசகம், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.