ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 பேருக்கு கரோனா உறுதி

ராமநாதபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 18 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 18 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் புதன்கிழமை வரையில் 5,205 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இவா்களில் 113 போ் உயிரிழந்துள்ளனா். 4,800-க்கும் மேற்பட்டோா் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வியாழக்கிழமை 240 போ் மட்டுமே சிகிச்சையில் இருந்தனா். மாவட்டத்தில் புதன்கிழமை சேகரிக்கப்பட்ட கபம் பரிசோதனை முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. அதில் 18 பேருக்கு மட்டுமே கரோனா தீநுண்மி உறுதியாகியுள்ளது. இவா்களில் 11 போ் பெண்கள். மாவட்டத்தில் கரோனா படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com