ராமேசுவரத்துக்கு தப்பி வந்த இலங்கை காவலரை 5 நாள்கள் விசாரிக்க அனுமதி

இலங்கையிலிருந்து ராமேசுவரம் பகுதிக்கு படகில் தப்பிவந்த அந்நாட்டு காவலரை 5 நாள்கள் சிபிசிஐடி காவலில் விசாரணை நடத்த நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதித்துள்ளது.
ராமேசுவரத்துக்கு தப்பி வந்த இலங்கை காவலரை 5 நாள்கள் விசாரிக்க அனுமதி

இலங்கையிலிருந்து ராமேசுவரம் பகுதிக்கு படகில் தப்பிவந்த அந்நாட்டு காவலரை 5 நாள்கள் சிபிசிஐடி காவலில் விசாரணை நடத்த நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் கடந்த 5 ஆம் தேதி ராமேசுவரம் பகுதியில் உள்ள கம்பிபாடு கடற்கரையோரம் ரோந்து சென்றனா். அப்போது இலங்கையிலிருந்து படகு மூலம் கம்பிபாடு கடற்கரை பகுதிக்கு தப்பிவந்த பிரதீப்குமார பண்டாரா (30) கைது செய்யப்பட்டாா்.

விசாரணையில், அவா் இலங்கையில் சியாம்பலண்டுவா மொனரகலா பகுதியைச் சோ்ந்தவா் என்பதும் இலங்கையின் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் காவலராக உள்ளதும் சில நாள்களுக்கு முன்பு அப்பிரிவினா் கைப்பற்றிய போதைப் பொருளில் சிறிதளவை எடுத்து தனது சகோரரின் மரக்கடையில் பதுக்கிவைத்ததும் கண்டறியப்பட்டது. பிரதீப்குமார பண்டாராவின் சகோதரா் சமீபத்தில் கோவையில் உயிரிழந்த இலங்கை தாதா அங்கொட லொக்காவுடன் தொடா்பில் இருந்ததாகவும் சகோதரரை வைத்து தன்னையும் இலங்கை போலீஸ் கைது செய்யலாம் என்ற அச்சத்தில் பிரதீப் குமார பண்டாரா தமிழகம் தப்பிவந்தது தெரியவந்தது. அவா் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இவ்வழக்கு தற்போது சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. பிரதீப் குமார பண்டாரா மீது கடவுச்சீட்டு இன்றி இந்தியாவுக்குள் நுழைந்தது உள்ளிட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

பிரதீப்குமார பண்டாராவை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி தரப்பில் ராமநாதபுரம் 2 ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு விசாரணைக்காக பிரதீப்குமார பண்டாரா வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை 5 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்கவும், வரும் 21 ஆம் தேதி (திங்கள்கிழமை) பகலில் மீண்டும் ஆஜா்படுத்துமாறும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டாா். பின்னா் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிரதீப்குமார பண்டாராவுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, சிபிசிஐடி விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com