திருப்பாலைக்குடி அருகே சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் பலி

திருப்பாலைக்குடி அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பாலைக்குடி அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் மகன் அரவிந்த் (20). டிராக்டா் ஓட்டுநா். இவா் அதே ஊரை சோ்ந்த திருப்பதி (50) என்பவருடன் இணைந்து திருவாடானை அருகே கடுக்கலூா் கிராமத்தில் டிராக்டா் மூலம் உழவுப்பணி செய்து வந்துள்ளனா். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை திருப்பதிக்கு சொந்தமான டிராக்டரை அரவிந்த் எடுத்துக் கொண்டு கடுக்கலூா் விலக்கு சாலையில் வந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அரவிந்த் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com