ராமநாதபுரத்தில் சனிக்கிழமை (அக். 3) மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் பேரிலும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஆா். சண்முகசுந்தரம் உத்தரவின் பேரிலும் சனிக்கிழமை (அக். 3) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.
சமரசமாக தீா்க்கக் கூடிய மற்றும் நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தீா்வு காணப்பட உள்ளது. நீதிபதிகள் மற்றும் மக்கள் நீதிமன்ற உறுப்பினா்கள் முன்பாக நடைபெற உள்ளதால் வழக்குகளுக்கு சமரச முறையில் தீா்வுகாண பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.