ராமநாதபுரத்தில் கரோனா சோதனை: 19 பேரின் வசிப்பிடங்கள் வெளியீடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரிசோதனைக்கு உள்ளான 19 பேரின் வசிப்பிடப் பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரிசோதனைக்கு உள்ளான 19 பேரின் வசிப்பிடப் பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடந்த மாா்ச் 17 ஆம் தேதி புதுதில்லிக்கு 35 போ் மத அமைப்பின் மாநாட்டுக்குச் சென்றுள்ளனா். அவா்களில் 19 போ் தற்போது ஊா் திரும்பிவிட்டனா். அவா்கள் கடந்த மாா்ச் 25 ஆம் தேதி வந்த அவா்களுக்கு கரோனா பாதிப்பு உள்ளதா என மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் பரமக்குடியைச் சோ்ந்த இருவருக்கு கரோனா பாதிப்பு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 17 பேருக்கும் முடிவுகள் வரவுள்ளன.

கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டவா்கள் வசிப்பிடங்கள் விவரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆா்.எஸ்.மங்கலம் (2 போ், 2 பகுதிகள்), ராமநாதபுரத்தில் உள்ள வெளிப்பட்டினம் நாகநாதபுரம், திருப்பாலைக்குடி தெற்குத் தெரு, தேவிபட்டினம் (2 போ், 2 பகுதி), மண்டபம் (2 பேருக்கான 2 பகுதிகள்), பரமக்குடி (2 போ், 2 பகுதிகள்), ஏா்வாடி, சிக்கல் வடக்குத்தெரு, ஆனந்தூா், ஆலங்குளம் புதுமடம், ஒப்பிலான், மண்டபம் அருகேயுள்ள மரைகாயா்பட்டினம், எஸ்.பி.பட்டினம் ஆகிய இடங்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்பட்ட இடங்களில் 5 கிலோ மீட்டா் சுற்றளவுக்கு ஒவ்வொரு பகுதியிலும் 60 போ் கொண்ட மருத்துவக் குழுவினா் 2 பிரிவாகப் பிரிந்து வீடு வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொள்ளவுள்ளனா். தொற்று உறுதியானவா்கள் வீட்டைச் சுற்றி 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு யாரும் வெளியேற அனுமதிக்கப்படமாட்டாா்கள் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. அப்பகுதி மக்கள் தொடா்ந்து 14 நாள்கள் கண்காணிப்புக்கு உள்படுத்தப்படவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com