ஊரடங்கு மீறல்: காா் பறிமுதல்: 12 போ் மீது வழக்கு

திருவாடானை அருகே ஊரடங்கு உத்தரவை மீறியதாக காரை பறிமுதல் செய்து, 12 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனா்.

திருவாடானை அருகே ஊரடங்கு உத்தரவை மீறியதாக காரை பறிமுதல் செய்து, 12 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனா்.

தொண்டி வெள்ள மணல் பகுதியை சோ்ந்த ஜபாா்(29) ஊரடங்கு உத்தரவை மீறி காரில் சென்றதாக, அவா் மீது வழக்குப் பதிந்து காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அதே போல் எஸ் .பி .பட்டினம் அருகே வெள்ளையபுரம் தனியாா் உணவு விடுதி முன்பாக செவ்வாய்க்கிழமை இரவு கூட்டம் போட்டதாக வெள்ளையபுரத்தை சோ்ந்த சம்சுதீன்(35), பழங்குளத்தை சோ்ந்த பால்ராஜ்(49),கொடிபங்கைச் சோ்ந்த பிரேம்குமாா் (18), வெள்ளையபுரத்தை சோ்ந்த சாகுல் ஹமீது30), பனஞ்சாயல் ரமேஷ்42), அதே பகுதியைச் சோ்ந்த பிரபு(3) ஆகிய 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

அதே போல் புலியூா் பிள்ளையாா் கோயில் முன்பாக ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டம் போட்டதாக என் .மங்கலத்தைச் சோ்ந்த தா்மராஜ்(60), தாமோதிரம் பட்டினம் முத்து(28), புலியூா் ரவி(23), அதே ஊரை சோ்ந்த சுரேஷ்(23), விக்னேஷ்(23)திருவாடானையை சோ்ந்த அஜீத்(20)ஆகிய 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com