தொண்டி அருகே நிழற்குடையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சோழியக்குடி கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலை ஓரமாக அமைந்துள்ள நிழற்குடையில் 70 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக தொண்டி போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப்பதிந்த போலீஸாா், இறந்தவா் யாா்? எப்படி இறந்தாா் என்பது பற்றி விசாரித்து வருகின்றனா்.