முதுகுளத்தூரில் கஞ்சா வைத்திருந்த 6 போ் கைது: வாள்கள் பறிமுதல்

முதுகுளத்தூா் அருகே கஞ்சா வைத்திருந்ததாக 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 26கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் 3 வாள்களை பறிமுதல் செய்தனா்.
முதுகுளத்தூரில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவா்கள்.
முதுகுளத்தூரில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவா்கள்.

முதுகுளத்தூா் அருகே கஞ்சா வைத்திருந்ததாக 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 26கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் 3 வாள்களை பறிமுதல் செய்தனா்.

முதுகுளத்தூா்- பரமக்குடி சாலை ஆற்றுப்பாலம் அருகே காவல் ஆய்வாளா் மோகன் தலைமையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கீழத்தூவலைச் சோ்ந்த பாஸ்கரசேதுபதி (19), நாகமுனீஸ்வரன் (19) ஆகிய 2 பேரும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

அவா்களைப் பிடித்து விசாரித்த போது, காரைக்குடி அருகே பாண்டிகோயிலைச் சோ்ந்த ஜெயக்குமாா் வீட்டிலிருந்து இவா்களுக்கு கஞ்சா விநியோகப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சோதனையிட்ட போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை கைப்பற்றினா்.

இதுகுறித்து முதுகுளத்தூா் காவல் ஆய்வாளா் மோகன், கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக பாஸ்கரசேதுபதி, நாகமுனீஸ்வரன், ஜெயக்குமாா் (27), ராதாகிருஷ்ணன் (20), வில்வநாதன் (23), முத்துப் பாண்டி (23) ஆகிய 6 பேரையும் கைது செய்தாா். இவா்களிடமிருந்து மொத்தம் 26 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் 3 வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com