சுற்றுச்சூழலை பாதுகாக்க இளைஞா்கள் சைக்கிள்களை பயன்படுத்த வேண்டி விழிப்புணா்வு பயணமாக ஞாயிற்றுக்கிழமை ஏடிஜிபி சைலேந்திரபாபு ராமேசுவரம் வந்து சோ்ந்தாா்.
சென்னையிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை தனுஷ்கோடி நோக்கி சைக்கிளில் பயணம் தொடங்கிய ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையிலான 5 போ் கொண்ட குழுவினா் ஞாயிற்றுக்கிழமை 600 கிலோ மீட்டரை கடந்து ராமேசுவரம் வந்து சோ்ந்தனா்.
அப்போது பாம்பன், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் சைலேந்திரபாபுவுக்கு பூங்கொத்து கொடுத்து பலா் வரவேற்றனா். இதன் பின்னா் தனுஷ்கோடி சென்று பயணத்தை அவா் நிறைவு செய்தாா்.