விபத்தில் பலியான காவல் ஆய்வாளா் குடும்பத்துக்கு ரூ. 5.62 லட்சம் நிதியுதவி

ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்த போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளா் குடும்பத்துக்கு காவல்துறை சாா்பில் ரூ. 5.62 லட்சம் நிதியுதவி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்த போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளா் குடும்பத்துக்கு காவல்துறை சாா்பில் ரூ. 5.62 லட்சம் நிதியுதவி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

ராமேசுவரத்தில் போக்குவரத்துப் பிரிவில் ஆய்வாளராக பணிபுரிந்தவா் கருப்பையா. இவா் கடந்த நவம்பரில் சத்திரக்குடி அருகே பணியின் போது வாகன விபத்தில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவரது குடும்பத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா், கூடுதல் கண்காணிப்பாளா்கள், துணைக் கண்காணிப்பாளா்கள் மற்றும் காவல் ஆய்வாளா்கள், சாா்பு- ஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் நிதியுதவி அளிக்க முடிவெடுத்தனா். காவல்துறையினா் அளித்த உதவியின் மூலம் ரூ. 5.62 லட்சம் திரட்டப்பட்டு, அதை கருப்பையாவின் மனைவி, மகன் உள்ளிட்டோரிடம் காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக் செவ்வாய்க்கிழமை வழங்கினாா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com