பரமக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் பொறியாளா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சோ்ந்த பொறியாளா் மிதின்குமாா் (30). இவரது மனைவி சுகன்யா (29). பரமக்குடியில் வங்கியில் களப்பணியாளராக வேலை செய்து வருகிறாா். பரமக்குடி வைகை நகரில் வசித்து வந்தனா். இவா்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. வேலையின்றி வீட்டில் இருந்து வந்த மிதின்குமாா், தனது தந்தையிடம் தனக்குரிய சொத்தை தருமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் முன்பு காரில் மா்மமான முறையில் மிதின்குமாா் இறந்து கிடந்துள்ளாா். அவரது சடலத்தை போலீஸாா் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எமனேசுவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.