பரமக்குடியில் வழக்குரைஞா் சி.பசுமலை எழுதிய ‘நடந்ததை சொல்கிறேன்’ என்ற நூல் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு தென்காசி மாவட்ட பதிவாளா் பாலு தலைமை வகித்து நூலை வெளியிட்டாா். அதனை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.முத்தையா பெற்றுக்கொண்டாா். விழாவுக்கு வைகை பாசன சங்க பொதுச் செயலாளா் மதுரைவீரன், சை.சௌந்திரபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கவிஞா் செட்டியப்பன் நூல் ஆய்வுரை செய்தாா். எழுத்தாளா் சி.பசுமலை ஏற்புரை நிகழ்த்தினாா். ஊராட்சித் தலைவா் பாலகிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.
முன்னதாக, ஓய்வு பெற்ற ஆசிரியா் செ. சந்தியாகு வரவேற்றாா். ஆசிரியை சூ. மரியஆக்னெஸ் நன்றி கூறினாா்.