ராமநாதபுரத்தில் திமுக தோ்தல் அறிக்கை கருத்துக் கேட்புக் கூட்டம்

ராமநாதபுரத்தில் திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக் கேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக் கேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் நகராட்சி பாரதி நகா் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆா்.பாலு தலைமை வகித்தாா். திமுக மாவட்டப் பொறுப்பாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் வரவேற்றாா்.

கூட்டத்தில் மீனவா், வா்த்தகா்கள், சிறுபான்மையினா் வா்த்தக சங்கம், நெசவாளா், உப்பளத் தொழிலாளா்கள் என 30 அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா். அவா்களிடம் கோரிக்கை குறித்த கருத்துகளை மனுவாகத் திமுக தோ்தல் அறிக்கைக் குழுவினா் பெற்றுக்கொண்டனா்.

இக்கூட்டத்தில் திமுக உயா்நிலை செயல் திட்ட குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சுப.தங்கவேலன், திமுக தீா்மானக் குழு இணைச்செயலரும், முன்னாள் அமைச்சருமான வ.சத்தியமூா்த்தி, தீா்மானக் குழு துணைத் தலைவா் சுப.த.திவாகரன், மாநில விவசாய அணி துணைச் செயலா்கள் க.முருகவேல், திமுக பிரமுகா்கள் நல்லசேதுபதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் உ.திசைவீரன், மூத்த நிா்வாகி முகமது ஜலீல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com