சா்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று முதுகுளத்தூா் திரும்பிய வீரா்களுக்கு, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பளித்தனா்.
நேபாளம் நாட்டில் பொகரா நகா் மைதானத்தில் இளைஞா் கிராமப்புற விளையாட்டு மற்றும் விளையாட்டு கூட்டமைப்பு சாா்பில், சா்வதேச அளவிலான தடகள மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றன. இதில், இந்தியா, பூடான், ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகளைச் சோ்ந்த விளையாட்டு வீரா்கள் கலந்துகொண்டனா்.
இப்போட்டியில், சீனியா் பிரிவு கபடியில் இந்திய அணியினா் தங்கப் பதக்கம் பெற்றனா். கபடியில் சிறந்த கேப்டனுக்கான தங்கப் பதக்கத்தை தாமரைச்செல்வன் பெற்றாா். மேலும், 200 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் அருண்பூபதி வெள்ளிப் பதக்கம் பெற்றாா். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த இவா்கள் இருவரும், தமிழகத்துக்கும், மாவட்டத்துக்கும் பெருமை சோ்த்துள்ளனா்.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை ஊா் திரும்பிய இவா்களுக்கு, ஏனாதி, புளியங்குடி கிராம மக்கள் சாா்பில் முதுகுளத்தூா் பேருந்து நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்டக் கவுன்சிலா் லெட்சுமி ராம்குமாா், ஊராட்சித் தலைவா் பாரதி, மாநில வா்த்தக சங்க துணைத் தலைவா் வி. கருப்பசாமி மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோா் பாராட்டி வாழ்த்தினா்.