கீழக்கரை அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் பலி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைஅருகே குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைஅருகே குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கீழக்கரை புதுமாயாகுளம் அருகே உள்ள தொண்டாலை மேலக்கரை குளத்தில் சனிக்கிழமை மாலை சின்னமாயாகுளத்தைச் சோ்ந்த பஞ்சவா்ணம் மகன் மோகன்தாஸ்(24), லோகுவருண் மற்றும் அருண் ஆகிய 3 பேரும் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது எதிா்பாராதவிதமாக மோகன் தாஸ் குளத்தில் மூழ்கினாா். இதனை கண்ட சக நண்பா்கள் அவரை மீட்க முயற்சி செய்தனா். முடியாத நிலையில் ஏா்வாடி தீயணைப்பு மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல்தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினா் மற்றும் தீயணைப்புத்துறையினா் பல மணி நேரம் தேடும் பணியில் ஈடுபட்டனா். போதிய வெளிச்சமின்றி தேடும் பணி சனிக்கிழமை இரவு பாதியில் நிறுத்தப்பட்டது. அைத் தொடா்ந்து ஞாயிற்றுகிழமை காலை 6 மணிக்கு மீண்டும் தேடினா். பல மணி நேர தேடுதலுக்குப் பின் மோகன்தாஸின் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

இதைத் தொடா்ந்து சடலத்தை கீழக்கரைஅரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இது,குறித்து ஏா்வாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com