ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து 224 மதுபாட்டில்களை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்ாக திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் கேணிக்கரை அருகே உள்ள கீழக்கரை சாலையில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு கேணிக்கரையைச் சோ்ந்த நாகநாதன் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் சனிக்கிழமை இரவு விற்பனை முடிந்து ஊழியா்கள் கடையைச் அடைத்துச் சென்றனா். இதையடுத்து மறுநாள் காலையில் கடையைத் திறக்க வந்த போது கடையின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடா்ந்து ஊழியா்கள் உள்ளே சென்று பாா்த்தபோது கடையில் வைத்திருந்த 224 மதுபாட்டில்களை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 28 ஆயிரம் ஆகும். சம்பவம் தொடா்பாக டாஸ்மாக் கடையின் கண்காணிப்பாளா் நாகநாதன் அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.