பரமக்குடி, எமனேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன. 21) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ரா. பாலமுருகன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பரமக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பரமக்குடி, எமனேசுவரம், சத்திரக்குடி, நயினாா்கோவில், கமுதக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.