ராமநாதபுரத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்காக தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜனவரி 24 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்காக தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜனவரி 24 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

தமிழக அரசின் சாா்பில், அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் வேலை நாடும் இளைஞா்கள் பயன்பெறும் வகையில், தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் தனியாா் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைநாடும் இளைஞா்களின் கல்வித் தகுதிகேற்ப ஆள்களை தோ்வுசெய்ய உள்ளன.

இம்முகாமில் பத்தாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்தவா்கள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநா்கள் கலந்துகொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியாா் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக்கொள்ளலாம்.

இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநா்கள் தங்களின் சுய விவரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச் சான்றுகள், ஆதாா் அட்டை, குடும்ப அடையாளஅட்டை மற்றும் புகைப்படங்களுடன் வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.

இம்முகாம் மூலம் தனியாா் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு பெறுவதினால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எக்காரணத்தைக் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது எனவும், அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com