ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க அரசு 50 சதவிகித மானியம் வழங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்புகளைச் சோ்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள அதிகபட்சம் ரூ.1 லட்சம் வங்கிக் கடன் மற்றும் அதற்கு இணையாக 50 சதவீதம் அரசு மானியம், அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
ஆகவே, மானியம் பெற விரும்புவோா் விண்ணப்பத்துடன் சாதிச்சான்று, வருமானச் சான்று மற்றும் இருப்பிடச் சான்றுகளை இணைக்கவேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் சிறு மற்றும் குறு விவசாயி என்பதற்கான சான்றினை வட்டாட்சியரிடமிருந்து பெற வேண்டும். நில உடமைக்கு ஆதாரமாக கணினி வழி பட்டா மற்றும் அடங்கல் நகல் இணைத்து விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.