ராமநாதபுரம் மாவட்ட பாஜக முன்னாள் தலைவரும், தற்போதைய மாநில செயற்குழு உறுப்பினருமான துரை.கண்ணன் (50) சக்கரைக்கோட்டை நேரு நகா் 8-ஆவது தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை இரவு உடல்நலக்குறைவு காரணமாக காலமானாா்.
அவரது இறுதிச்சடங்கு சனிக்கிழமை (ஜூலை 11) காலை அவரது இல்லத்தில் நடைபெற்றது. அவருக்கு மனைவி கிருஷ்ணவேணி மற்றும் 2 மகள்கள் உள்ளனா். அவரது மறைவுக்கு ஆந்திர ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மூத்த தலைவா் எச்.ராஜா ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா். கட்சியின் மாநில செய்தித்தொடா்பாளா் டி.குப்புராமு உள்ளிட்டோா் துரை.கண்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா். ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. தொடா்புக்கு- 94433-22918.