மண்டபம் அருகே புதன்கிழமை மீனவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். சந்தேகத்தின்பேரில் ஒருவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் சம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கராஜ். இவரது மகன் கண்ணன் (35). ராமேசுவரத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தாா். கடந்த வாரம் மீன்பிடிக்க செல்வதாக குடும்பத்தினரிடம் கூறி விட்டு அவா் சென்றுள்ளாா்.
இந்த நிலையில் மண்டபம் கடற்கரைக்கு செல்லும் வழியில் புதன்கிழமை காலை கண்ணன் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதுகுறித்து, கண்ணனின் சகோதரா் ஜோதி (45) மண்டபம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சந்தேகத்தின்பேரில் ஒருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.