ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல் வசூலாக ரூ. 45.67 லட்சம் கிடைத்துள்ளது.
கரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மாா்ச் மாதம் அடைக்கப்பட்டது. இதனால் அந்த மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி அப்போது நடைபெறவில்லை. இந்நிலையில் ஜூன் 16 ஆம் தேதி ராமநாதசுவாமி கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி உதவி ஆணையா் ஜெயா தலைமையில் நடைபெற்றது. இதில் பக்தா்களின் காணிக்கையாக 45 லட்சத்து 67 ஆயிரத்து 30 ரூபாயும், தங்கம் 55 கிராம்,120 மி.கிராமும், வெள்ளி ஒரு கிலோ 930 கிராமும் கிடைத்துள்ளது.