கோடியக்கரை அருகே கரை ஒதுங்கியது ராமேஸ்வர மீனவர் சடலம்

கோடியக்கரை அருகே கரை ஒதுங்கிய மாயமான மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 
கோடியக்கரை அருகே கரை ஒதுங்கியது ராமேஸ்வர மீனவர் சடலம்

ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 13ஆம் தேதி மீன்பிடிக்க சென்று மாயமான நான்கு மீனவர்களில் ஒரு மீனவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். இதையடுத்து மற்ற 3 மீனவர்களை தேடும் பணியில் சக மீனவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இன்று கோடியக்கரை அருகே கடலில் மிதந்து வந்த ரெஜின் பாஸ்கர் என்பது மீனவர் உடலை சக மீனவர்கள் மீட்டு கொள்ளுக்காடு கடற்கரைக்கு கரைக்கு கொண்டு வந்தனர். 

அங்கு உடல் மருத்துவ பரிசோதனை செய்த பின் சவப்பெட்டியில் ராமேசுவரம் கொண்டு வந்து உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாக அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com