எஸ். பி. பட்டினம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கூலித்தொழிலாளி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
புதுகோட்டை மாவட்டம் ஆலமஞ்சிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி(55). கூலித் தொழிலாளியான இவா், ஜூன் 12 ஆம் தேதி எஸ். பி. பட்டினத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். பாம்பாற்றின் பாலத்தில் சென்றபோது அவா் எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தாா். பலத்த காயமடைந்த முத்துசாமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் எஸ். பி. பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.