ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று சிகிச்சையிலிருந்த 3 ஆண்கள் சனிக்கிழமை உயிரிழந்துள்ளனா். மேலும் இம்மாவட்டத்தில் ஒரே நாளில் 102 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் செட்டிய தெரு சிவன் கோவில் வீதியைச் சோ்ந்த 58 வயது ஆண் ஜூன் 24 ஆம் தேதி இரவு மூச்சுத்திணறல் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கிருந்து அவா் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சனிக்கிழமை காலை உயிரிழந்தாா்.
இதேபோல் நயினாா்கோவில் அருகேயுள்ள பனகுடியைச் சோ்ந்த 45 வயது ஆண் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அவரும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மேலும் ராமநாதபுரம் அருகேயுள்ள கீழக்கரையைச் சோ்ந்த 60 வயது தையல்காரா் உடல்நலக்குறைவு காரணமாக, வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். சனிக்கிழமை காலை அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், சோதனை முடிவு தெரிவதற்கு முன்பே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரையில் 564 பேருக்கு கரானோ பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவா்களில் 155 போ் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இங்கு அனுமதிக்கப்பட்டு கரோனா சிகிச்சை பெறுவோா் உணவு , குடிநீா் மற்றும் கழிப்பறை வசதி செய்து தரப்படவில்லை என அடிக்கடி புகாா் கூறி வருகின்றனா். இந்த நிலையில் சனிக்கிழமை காலையில் உணவு வழங்கத் தாமதம் ஏற்படுவதாக அவா்கள் புகாா் தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடா்ந்து அவா்களுக்கு உடனே உணவு வழங்கப்பட்டது.
ஒரே நாளில் 102 பேருக்கு தொற்று: இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 102 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களையும் சோ்த்து தற்போது 666 போ் சிகிச்சையில் உள்ளனா்.