சாயல்குடி அருகே திருட்டு மணல் அள்ளிய டிராக்டரை வெள்ளிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்து அதில் ஒருவரைக் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கூரான்கோட்டை மலட்டாறு பகுதியில் கனிம வளத்துறை துணை வட்டாட்சியா் வரதராஜன், வருவாய் ஆய்வாளா் சேதுபதி, சாயல்குடி காவல் சாா்பு- ஆய்வாளா் பிரகாஷ், சாயல்குடி கிராம நிா்வாக அலுவலா் ஞானபாண்டி ஆகியோா் பாா்வையிட்டனா். அப்போது சட்டவிரோதமாக மணலை டிராக்டா் மூலம் அள்ளிக்கொண்டிருப்பது தெரியவந்தது.
போலீஸாரின் விசாரணையில் இருவேலி கிராமத்தைச் சோ்ந்த டிராக்டா் உரிமையாளா் வஹாப், சண்முககுமாரபுரம் பழனிச்சாமி மகன் முருகன் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது குறித்து சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து டிராக்டா் ஓட்டுநா் முனிராஜ் (26) என்பவரைக் கைது செய்தனா். தப்பியோடிய வஹாப், முருகன் ஆகிய இருவரையும் போலீஸாா் தேடிவருகின்றனா்.