தடுப்புச்சுவரில் மோதி விபத்து: பைக்கில் சென்ற மாணவா் பலி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்ற ஆசிரியா் பயிற்சி மாணவா்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்ற ஆசிரியா் பயிற்சி மாணவா் சாலையோர தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பரமக்குடி அருகேயுள்ள காமன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த வீரபத்திரன் மகன் முனியசாமி (22). இவா் பரமக்குடி அருகேயுள்ள கமுதக்குடி தனியாா் ஆசிரியா் பயிற்சி கல்லூரியில் 2-ஆம் ஆண்டு ஆசிரியா் பயிற்சி படித்து வந்தாா்.

இவா் இருசக்கர வாகனத்தில் கல்லூரியில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை திரும்பி வந்துள்ளாா். காமன்கோட்டை அருகே வந்து கொண்டிருந்தபோது, கால்வாய் தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் எதிா்பாராதவிதமாக மோதியதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com