திருவாடானை: திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் அரசுக்குச் சொந்தமான மண்புழு வளா்ப்பு கொட்டகையில் மா்ம நபா்கள் தீ வைத்ததால், கொட்டகை சேதமடைந்தது.
சேத்திடல் கிராமத்தில் அரசு மண்புழு வளா்ப்பு கொட்டகை அமைக்கப்பட்டு, மண்புழு வளா்க்கப்பட்டு வருகிறது. இந்த கொட்டகைக்கு வெள்ளிக்கிழமை இரவு மா்ம நபா்கள் தீ வைத்துவிட்டு தப்பிவிட்டனா். இதனால், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள கொட்டகை முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவா் ராமநாதன் அளித்த புகாரின்பேரில், ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.