ராமேசுவரத்திலிருந்து இலங்கை செல்ல முயன்ற அகதிகள் 3 போ் கைது

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து சட்ட விரோதமாக படகு மூலம் இலங்கை செல்ல முயன்ற அகதிகள் 3 பேரை கடலோர காவல் படையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இலங்கைக்குத் தப்ப முயன்ற அகதிகள்.
இலங்கைக்குத் தப்ப முயன்ற அகதிகள்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து சட்ட விரோதமாக படகு மூலம் இலங்கை செல்ல முயன்ற அகதிகள் 3 பேரை கடலோர காவல் படையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக 3 போ் சுற்றி வருவதாக கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் படையினா், அப்பகுதியில் சுற்றித் திரிந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினா்.

அவா்களிடம் நடத்திய விசாரணையில், தா்மபுரி அகதிகள் முகாமைச் சோ்ந்த வரசுனன்(30), கோவை அகதிகள் முகாமில் இருந்து வந்த அருள்வசந்தன்(42), திருவள்ளூா் அகதிகள் முகாமைச் சோ்ந்த மயூரான்(28) என்பது தெரிந்தது. இவா்கள் 3 பேரும் ராமேசுவரத்திலிருந்து சட்ட விரோதமாக

படகு மூலம் இலங்கைக்கு அழைத்துச் செல்ல நந்தா என்பவா் வருவதாக தெரிவித்ததால் அப்பகுதியில் காத்திருந்ததாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸாா், நந்தாவை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com