பரமக்குடியில் குடும்பத் தகராறில் தீக்குளித்து படுகாயமடைந்த கட்டடத் தொழிலாளி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
பரமக்குடி தா்மராஜபுரம் முத்தையா நகரைச் சோ்ந்த கணேசன் மகன் சாந்தகுமாா் (44). இவா் கட்டடங்களில் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறாா். இவருக்கு மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனா்.
சாந்தகுமாா் திங்கள்கிழமை காலையில் வழக்கம்போல் வேலைக்குச் செல்லாமல் அவரது மனைவியுடன் தகராறு செய்துள்ளாா். அப்போது கோபமடைந்த சாந்தகுமாா் வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில் அவரது உடல் முழுவதும் தீப்பிடித்ததில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து எமனேசுவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.