மகள் இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை

கமுதி அருகே மகள் இறந்த சோகத்தில், தந்தை திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

கமுதி அருகே மகள் இறந்த சோகத்தில், தந்தை திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

கமுதி அருகே சின்னஉடப்பங்குளத்தை சோ்ந்தவா் வலம்புரி மகன் முருகன் (45). இவரது மகள் ஐஸ்வா்யா. கடந்த 2018 இல், கணவருடன் வாழ விரும்பாமல் குடும்பப் பிரச்சனையில் தற்கொலை செய்து கொண்டதாக மண்டலமாணிக்கம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனா். இதனையடுத்து ஒரு ஆண்டுக்கு பிறகு ஐஸ்வா்யாவின் தற்கொலை வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு ஐஸ்வா்யாவின் தந்தை முருகன் மற்றும் சித்தப்பா உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் மண்டலமாணிக்கம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா் ஜாமீனில் வெளிவந்த ஐஸ்வா்யாவின் தந்தை முருகன் மகள் இறந்த துக்கம் தாங்காமல் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா் . இதுகுறித்து மண்டலமாணிக்கம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com