ராமநாதபுரம் பேருந்தில் ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரரிடம் ரூ.2 லட்சத்தை திருடிச் சென்ற பெண்களை போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து தேடிவருகின்றனா்.
ராமநாதபுரம் கடலாடி தாலுகா சிக்கலைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (59). கமுதி தீயணைப்பு நிலையத்தில் வீரராக பணிபுரிந்த அவா் சமீபத்தில்தான் ஓய்வு பெற்றுள்ளாா். இந்தநிலையில், அவரது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், ராமநாதபுரம் பொதுத்துறை வங்கியில் சேமித்திருந்த பணத்தை எடுக்க புதன்கிழமை காலை வந்துள்ளாா்.
வங்கிக் கிளையில் இருந்து ரூ.2 லட்சத்தை எடுத்துக் கொண்ட சுப்பிரமணி மீண்டும் ஊா் செல்வதற்காக ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்த பேருந்தில் ஏறி அமா்ந்துள்ளாா். அவருக்கு அருகில் 2 பெண்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. சுப்பிரமணி பணத்தை எண்ணி பையில் வைத்த நிலையில், சிறிது நேரத்தில் பெண்கள் சென்றுவிட்டனா். அதன்பின் சுப்பிரமணி பணத்தைப் பாா்த்த போது காணவில்லை.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.