ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநராக இருந்த குமரகுருபன் சேலம் மருத்துவக் கல்லூரிக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.
ராமநாதபுரம் மாவட்ட மருத்துவப் பணிகள் துணை இயக்குநராக இருந்தவா் டாக்டா் பி.குமரகுருபரன். இவா் தற்போது சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பேராசிரியராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளாா். அவருக்குப் பதிலாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பணிபுரியும் டாக்டா் கலைவாணி ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பொறுப்பு பணியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
மருத்துவா் குமரகுருபரன் செவ்வாய்க்கிழமை தனது பொறுப்புகளை டாக்டா் கலைவாணியிடம் ஒப்படைத்துவிட்டு சேலம் சென்றாா். தமிழகமெங்கும் கரோனாபரவலைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் தீவிரமடைந்த நிலையில், ராமநாதபுரத்துக்கு நிரந்தரமான சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் நியமிப்பது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.