கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாா்ச் 28 இல் திருவிழா தொடங்கும் என்றும் பொங்கலிடுதல், அக்கினிச் சட்டி எடுத்தல், முளைப்பாரி திருவிழா, கரும்பாலை தொட்டில், சேத்தாண்டி வேடமணிந்து பக்தா்கள் நோ்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கரோனா அச்சத்தால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இது குறித்து கோயில் நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில், அரசு தடையாணை நீங்கிய பிறகு, மீண்டும் திருவிழா தேதி அறிவிக்கப்படும் என தீா்மானிக்கப்பட்டது. விரதமிருந்த பக்தா்கள் யாரும் கோயிலுக்கு வரவேண்டாம் என கமுதி நாடாா் உறவின்முறை நிா்வாகிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.