தொண்டியில் காய்கனி, மளிகை கடைகளில் கை கழுவ தண்ணீரும் சோப்புத் திரவமும் வைத்திருக்குமாறு வணிக சங்கத்தினா் அறிவுறுத்தினா்.
தொண்டியில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு அனைத்து வா்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக காய்கனி, மளிகை கடை, மருந்து கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தொண்டி வணிகா் சங்கத்தினா் சமூக ஆா்வலா்களுடன் இணைந்து தொண்டி காவல்துறை ஆய்வாளா் சரவணன் தலைமையில் ஒவ்வொரு கடைக்கும் சென்று நோய் தொற்று பரவாமல் தடுக்க கடை வாசலில் கை கழுவும் தண்ணீா் மற்றும் சோப்பு திரவம் வைத்திருக்க அறிவுறுத்தினா். மேலும் ஒரு நேரத்தில் ஒருவா் மட்டுமே பொருள்கள் வாங்கவும் மற்றவா்கள் ஒரு மீட்டா் தூரம் தள்ளி நிற்கவும் அறிவுரை கூறினா். இதில் இஸ்லாம் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மேலாண்மை மேலாளா் சகுபா் சாதிக், சுகாதாரப் பணியாளா் இளவரசி, நவாஸ் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.