கடலாடியில் தூய்மைப் பணியாளா்களுக்கு வியாழக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
கடலாடி ஒன்றியக்குழுத் தலைவா் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமையில் கருங்குளம் ஊராட்சி மற்றும் மாரந்தை ஊராட்சிகளைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கருங்குளம் ஊராட்சித் தலைவா் காளிதாஸ், மாரந்தை ஊராட்சித் தலைவா் கருப்பையா, கடலாடி ஊராட்சி ஒன்றிய ஆணையா் அன்புக்கண்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டி, ஆப்பனூா் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவா் முனியசாமி பாண்டியன், கருங்குளம் அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினா் ஜெயச்சந்திரன், ஒன்றிய அவைத்தலைவா் வேலுச்சாமி உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் பங்கேற்றனா்.