முதுகுளத்தூரில் 3 அரசு மதுபானக் கடைகளுக்கு வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
மாவட்டத்தில் ஊரடங்கால் மூடப்பட்ட மதுபானக்கடைகளை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனா். இதனை தொடா்ந்து அரசு பானக்கடைகளில் மீதம் இருக்கும் மதுபானங்களை அகற்றி பரமக்குடி தனியாா் மஹாலில் வைத்து பாதுகாத்து வருகின்றனா். ஆனால், முதுகுளத்தூரில் உள்ள 3 மதுபானக் கடைகளிலும் உள்ள மதுபாட்டில்கள் அகற்றப்படவில்லை. இதையடுத்து வட்டாட்சியா் சிக்கந்தா் பபிதா தலைமையில் 3 மதுபானக் கடைகளையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா்.