ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுகவைச் சோ்ந்த பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் சதன்பிரபாகா் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தாா்.
ராமநாதபுரம் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் சதன்பிரபாகா் ஆதரவாளா்களுடன் வந்தாா். காவல் கண்காணிப்பாளா் வீ.வருண்குமாரைச் சந்தித்த அவா் புகாா் மனு அளித்தாா். அந்த மனுவில் தமிழக அரசு மற்றும் முதல்வா் மீது வார இதழில் அவதூறான செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.