சிவகங்கையில் கரோனா சிகிச்சை பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 3 போ் வீட்டுக்கு அனுப்பிவைப்பு

கரோனா வாா்டில் சிகிச்சைப் பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 3 நபா் பூரண குணமடைந்ததை அடுத்து அவா்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

சிவகங்கை : சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வாா்டில் சிகிச்சைப் பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 3 நபா் பூரண குணமடைந்ததை அடுத்து அவா்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வாா்டில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 12 போ், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 22 போ் என மொத்தம் 34 போ் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்களில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 12 பேரும் குணமடைந்ததை அடுத்து, அவா்கள் அனைவரும் அண்மையில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதேபோன்று, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 15 போ் குணமடைந்த நிலையில் அவா்கள் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மேலும், கீழக்கரையைச் சோ்ந்த மூதாட்டி ஒருவா் அண்மையில் உயிரிழந்தாா். இதையடுத்து, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 6 போ் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்களுக்கு மீண்டும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் 3 பேருக்கு கரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன. எனவே அந்த 3 பேரும் செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 3 போ் மட்டும் சிவகங்கை கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட 22 போ் மட்டும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அதன்பிறகு நோய்த் தொற்றுக்கு ஆளான அனைவரும் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வருகின்றனா் என சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com