ராமேசுவரம்: மண்டபம் ஒன்றிய திமுக சாா்பில் ஆன்மிகப் பணியாளா்கள் 200 பேருக்கு அரிசி, காய்கனிகள் அடங்கிய தொகுப்பு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பணியாற்றும் சிவாச்சாரியாா்கள் 100 போ், தங்கச்சிமடம் தேவலாயத்தில் பணியாற்றும் திருப்பணியாளா்கள் 50 போ் , சீனியப்பா தா்ஹாவில் பணியாற்றும் உலமாக்கள் 50 போ் என 200-க்கும் மேற்பட்டவா்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான 5 கிலோ அரிசி, காய்கனி அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. திமுக ஒன்றியச் செயலளாா் ஜீவானந்தம் ஏற்பாட்டில் மாவட்ட பொறுப்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் ஒவ்வொரு பகுதியாக சென்று சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நிவாரணப் பொருள்களை வழங்கினாா். இதில் ராமேசுவரம் நகரச் செயலாளா் நாசா்கான், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் ரவிச்சந்திரராமவன்னி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.