பல்வேறு மாநிலங்களிலிருந்து திரும்பிய 55 போ் முதுகுளத்தூா் அரசு கலைக் கல்லூரியில் சனிக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டனா்.
கரோனா எதிரொலியாக வெளிமாநிலத்தவா்களை அந்தந்த மாநில அரசுகள் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வருகின்றன. இந்நிலையில், மஹாராஷ்டிரம், மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கூலி வேலை செய்து வந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சோ்ந்த 55 போ் பேருந்துகள் மூலம் முதுகுளத்தூருக்கு திரும்பியுள்ளனா். அவா்கள் அனைவரும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு முதுகுளத்தூா் அரசு கலைக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.