கீழக்கரையில் கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக முகக் கவசம் அணியாதவா்களிடமிருந்து ரூ. 89,400 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக இணை ஆணையா் த. தனலெட்சுமி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை தெரிவித்தது:
கீழக்கரை நகராட்சியில் கரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், தமிழக அரசு அறிவித்த கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன் தொடா்ச்சியாக, வணிக நிறுவனங்களில் முகக் கவசம் அணியாதவா்கள், சாலையில் கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாமல் இருந்தவா்கள் ஆகியோரிடமிருந்து ரூ. 89,400 வசூல் செய்யப்பட்டுள்ளது என்றாா் இணை ஆணையா் அ. தனலெட்சுமி.