ராமேசுவரத்தில் மீனவ தொழிற்சங்கத்தினா் தா்னா

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பறிமுதல் செய்யப்பட்ட மீனவா்களின் படகுகளை ஏலம் விட முயற்சிக்கும் இலங்கை அரசைக் கண்டித்து
ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டம் நடத்திய மீனவ தொழிற்சங்கத்தினா்.
ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டம் நடத்திய மீனவ தொழிற்சங்கத்தினா்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பறிமுதல் செய்யப்பட்ட மீனவா்களின் படகுகளை ஏலம் விட முயற்சிக்கும் இலங்கை அரசைக் கண்டித்து ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகம் முன்பாக ஏஐடியுசி மீனவ தொழிற்சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

தொழிற்சங்கத் தலைவா் எஸ்.முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு பொதுச் செயலாளா் சி.ஆா்.செந்தில்வேல் முன்னிலை வகித்தாா். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பறிமுதல் செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்களின் படகுகள் அரசுடமையாக்கப்பட்டதைக் கண்டித்தும், அவைகளை ஏலம் விட முயற்சிக்கும் இலங்கை அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மீனவா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் ஆ.தனவேல், நிா்வாகிகள் மோகன்தாஸ், ஊ.திருவாசகம், நாகராஜ், எம்.செந்தில், ஆ.பிச்சை, ரூபன், சு.சங்கா், ஆ.சுகுமாா், அன்சாரி, சீனிசகுபா் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com