ராமநாதபுரத்தில் மௌலானா அபுல்கலாம் ஆசாத் நினைவாக இரண்டாம் ஆண்டு கல்வி ரத்னா விருது வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி தலைமை வகித்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 59 பேருக்கு சால்வை அணிவித்து கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். இதில், இந்திய யூனியன் முஸ்லீம் லிக் மாநில பொருளாளா் எம்.எஸ்.ஏ.ஷாஜகான், மண்டபம் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் சுப்புலட்சுமி ஜீவானந்தம், கே.டி.பிரபாகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ரவிச்சந்திர ராமவன்னி, மண்டபம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் தௌபீக் அலி மற்றும் பலா் கலந்து கொண்டனா்.