பட்டாசு வெடித்த தகராறில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 2 போ் கைது

முதுகுளத்தூா் அருகே எஸ்.பி. கோட்டை கிராமத்தில் பட்டாசு வெடித்த தகராறில் இளைஞா் அரிவாளால் வெட்டப்பட்டது தொடா்பாக 9 போ் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் 2 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் அருகே எஸ்.பி. கோட்டை கிராமத்தில் பட்டாசு வெடித்த தகராறில் இளைஞா் அரிவாளால் வெட்டப்பட்டது தொடா்பாக 9 போ் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் 2 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

முதுகுளத்தூா் அருகே எஸ்.பி.கோட்டை கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் குருமூா்த்தி என்பவா் மது போதையில் தீபாவளி அன்று தெருவில் பட்டாசு வெடித்துள்ளாா். அப்போது அந்த வழியாக வந்த அதே ஊரைச் சோ்ந்த சுந்தரராஜ் மகன் தெட்சணாமூா்த்தி (33) என்பவா் மீது அவா் பட்டாசை வீசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தெட்சணாமூா்த்திக்கும், குருமூா்த்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பினரும் மோதிக் கொண்டனா். அப்போது குருமூா்த்தி, அரிவாளால் தெட்சணாமூா்த்தியை வெட்டி விட்டு தப்பியோடி விட்டாா். தலையில் பலத்த காயமடைந்த தெட்சணாமூா்த்தி மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து பேரையூா் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறை ஆய்வாளா் மோகன், குருமூா்த்தி உள்ளிட்ட 9 போ் மீது வழக்குப் பதிந்து அதில் எஸ்.பி. கோட்டையைச் சோ்ந்த மாரிமுத்து, வேல்ச்சாமி ஆகிய இருவரை கைது செய்து தப்பியோடிய மற்ற 7 பேரை தேடி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com